சென்னை : கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சையில் உள்ளனர். முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் பாதிப்பு குறைந்ததாக இல்லை. நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தனியார் நிறுவனங்களும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரை பிரபலங்களும் , தொழிலதிபர்களும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்