சென்னை: அரபிக்கடலில் நாளை டவ்-தே புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் உருவாவதால் தமிழகம், கேரளாவில் இன்று, நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என தெரிவித்துள்ளார்.