கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ரஜினி

சென்னை: இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியை நடிகர் ரஜினிகாந்த் போட்டுக்கொண்டார். கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ‘கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோம். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுகிறோம்’ என்கிற தகவல்களையே தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் ஏனோ கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.  இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினி நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். தனி விமானத்தில் திரும்பிய அவரை மனைவி லதா ஆரத்தி எடுத்து வரவேற்றார்.

போயஸ் கார்டன் வீட்டில் தற்போது குடும்பத்துடன் இருக்கும் ரஜினி, நேற்று இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவரது மகள் சவுந்தர்யா உடனிருந்தார். இதுதொடர்பாக தனது டிவிட்டரில் சவுந்தர்யா வெளியிட்டுள்ள பதிவில், ‘அப்பா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். கொரோனாவுக்கு எதிரான சண்டையில் நிச்சயம் வெல்வோம்’ என்று தெரிவித்து இருக்கிறார்.

Related Stories: