மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரமேஷ் பவார் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த டபிள்யூ.வி.ராமன் பதிவிக் காலம் முடிவடைத்த பிறகு புதிய பயிற்சியாளர் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. புதிய பயிற்சியாளர் பதவிக்கு ராமன், ரமேஷ் உட்பட 35பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 4 பெண்கள் உட்பட 8பேர் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அவர்களிடம் கடந்த 2 நாட்களாக காணொளி மூலம் தேர்வு நடந்தது. அதனை முன்னாள் வீரர்கள் மதன்லால், ஆர்.பி.சிங், வீராங்கனைகள் சுலக்ஷனா நாயக் ஆகியோரை கொண்ட குழு மேற்கொண்டது. அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமேஷ் பவாரை மீண்டும் தலைமை பயிற்சியாளராக பிசிசிஐ நேற்று நியமித்தது.