வரும் 18, 20ம் தேதிகளில் கலெக்டர்களுடன் மோடி ஆலோசனை

புதுடெல்லி: கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 100 மாவட்டங்களின் கலெக்டர்களுடன் பிரதமர் மோடி வரும் 18, 20ம் தேதிகளில் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தொற்று தொடர்பாக இதுவரை மாநில முதல்வர்கள், உயர் அதிகாரிகள், மருத்துவத்துறை வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி உள்ளார். முதன்முறையாக மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் ஆலோசனை நடைபெற உள்ளது. வரும் 18 மற்றும் 20ம் தேதிகளில் 2 கட்டமாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.  முதற்கட்டமாக 9 மாநிலங்களிலுள்ள 46 மாவட்ட கலெக்டர்களுடனும், இரண்டாம் கட்டமாக 10 மாநிலங்களிலுள்ள 5 மாவட்ட கலெக்டர்களுடனும் பிரதமர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சம்மந்தப்பட்ட மாநில முதல்வர்களும் பங்கேற்பார்கள்.

Related Stories: