கூட்டுறவு நிறுவன ஊழியர்களின் ஓய்வு வயது 59ல் இருந்து 60ஆக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு வயது 59ல் இருந்து 60ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன் கூடுதல் பதிவாளர் (சென்னை மண்டலம்) மற்றும் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு எழுதியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதினை 58ல் இருந்து 59ஆக உயர்த்தி ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டன. தற்போது, தமிழக அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதினை 59ல் இருந்து 60ஆக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதினை 59ல் இருந்து 60ஆக உயர்த்தப்படுகிறது. இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: