சென்னை:செங்கப்பட்டு கத்தோலிக்க மறை மாவட்டத்தில் பாதிரியாராக சேவை செய்து வந்தவர் பி.ஜான் சுரேஷ் (50). செங்கல்பட்டு மறை மாவட்டத்திற்கு உட்பட்ட மணப்பாக்கத்தில் உள்ள ஜீவன் ஜோதி ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் இயக்குநராக பதவி வகித்து வந்தார். லயேலா கல்லூரியலி படித்தார் மாணவர்களிடம் பல்வேறு ஆக்கபூர்வமான செயல்கள் மூலம் நன்மதிப்பை பெற்றவர். அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் சித்தாந்தங்களில் ஈர்க்கப்பட்ட இவர் சமூக நீதியை வலியுறுத்தும் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். பஞ்சமி நில மீட்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு மரணமடைந்தார்.