சென்னை: நாளை முதல் சென்னை மாநகராட்சியில் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்சிங் பேடி தெரிவித்துள்ளார். ஐஏஎஸ், காவல்துறை, மாநகராட்சி தலைமையில் zonal enforcement team அமைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் 30 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.