தென் ஆப்பிரிக்க அணியில் மீண்டும் டிவில்லியர்ஸ்!: ரசிகர்கள் மகிழ்ச்சி

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாதவர்கள் லிஸ்டில் டிவில்லியர்ஸ் பெயரும் அடங்கும். அனைத்துவித கிரிக்கெட்டிலும் தனது அதிரடி ஆட்டம் மூலம் தனக்கென தனி முத்திரைப் பதித்தவர் ஏபி டிவில்லியர்ஸ். நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் அவர் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். இது தென் ஆப்பிரிக்கா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்பொழுது மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்காக களம் இறங்க உள்ளதாக ஏபி டிவில்லியர்ஸ் கூறி உள்ளார்.

``தென்ஆப்பிரிக்க அணியில் நான் விளையாடுவதற்கு இடம் இருந்தால் அதனால் யாரும் பாதிப்படையாமல் இருந்தால், அதேபோல் மீண்டும் அணியில் இணைந்து விளையாடும் அளவுக்கு எனக்கு உடல் தகுதி இருக்கும் பட்சத்தில் நான்  மீண்டும் களம் இறங்கி விளையாட உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் பவுச்சருடன் நான் பேசியுள்ளேன். என்னிடம் அவர் மீண்டும் விளையாட விருப்பமா ? என்று முன்பே கேட்டிருந்தார். அதற்கு தற்போது நான் விளையாட விருப்பமாக உள்ளேன் என்று கூறியிருக்கிறேன் என்றும் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் தென்னாப்பிரிக்க ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். டிவில்லியர்ஸ் கூறியதை எல்லாம் வைத்துப் பார்த்தால் அவர் கண்டிப்பாக இந்த ஆண்டு நடக்க இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் டி20 தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மைதானங்களில் மிக அதிரடியாக ஆடக்கூடிய டிவில்லியர்ஸ் ஒருவேளை இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க இருக்கும் உலக கோப்பை டி20 தொடரில் விளையாடினால், நிச்சயமாக தென்னாப்பிரிக்க அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.

Related Stories: