திருவனந்தபுரம்: திருச்சூர் மருத்துவமனையில் கொரோனா நோயாளி மரணமடைந்ததை கண்டு பயந்து ஓடியவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே புத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (64). கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது. அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர்.