சென்னை: சாலை போடும்போது மேற்தள கட்டுமானத்தை சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் போடவேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் எந்த சூழ்நிலையிலும் மாநகராட்சி, நகராட்சி, போரூராட்சி பகுதிகளில் சாலைகளின் மட்டத்தை அதிகரிக்கக் கூடாது எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.