ஈரான் பயணியிடம் போலீஸ் விசாரணை

திருவொற்றியூர்: எண்ணூர் பகுதியில் பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றித்திரிந்த ஈரான் நாட்டு பயணியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.எண்ணுார் தாழங்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கிடமாக வாலிபர் ஒருவர் சுற்றித்திரிவதாக, எண்ணுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரை  பிடித்து விசாரித்தனர்.

அதில் ஈரான் நாட்டை சேர்ந்த நோஸ்ராடோலோ(39), 2018ல் சுற்றுலாவாசியாக இந்தியா வந்தவர் 4 வருடங்களாக இங்கேயே தங்கிவிட்டார். அவரிடம் பாஸ்போர்ட், விசா ஏதுமில்லாததால் ஆங்காங்கே கிட்டார் வாசித்து, அதில் கிடைக்கும்  வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்துள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் தூதரகம் மூலமாக அவரை சொந்த நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: