ரோம்: இத்தாலி ஓபன் 2வது சுற்றில் முன்னனி வீராங்கனை ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேற, முன்னனி வீரர் ஜோகோவிச், வீராங்கனை ஆஷ்லி பார்தி ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறினர், ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. முன்னணி வீராங்கனைகள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளனர். அப்படி தகுதிப்பெற்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா( 2வது ரேங்க்), அமெரிக்கா வீராங்கனை ஜெசிகா பெகுலா(31வது ரேங்க்) ஆகியோர் மோதினர். டைபிரேக்கர் வரை நீண்ட முதல் சுற்றை ஜெசிகா 7-6 என்ற கணக்கில் போராடி வென்றார். தொடர்ந்து நடந்த 2வது சுற்றை 6-2 என்ற கணக்கில் ஜெசிகா எளிதில் கைப்பற்றினார். அதனால் ஒரு மணி 27 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில், ஒசாகா 0-2 என நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.