திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கடந்த மாதம் 21ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை ஆன்லைனில் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டை ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்தனர். முழு ஊரடங்கால் பக்தர்கள் வரமுடியாது என்பதால் அவர்கள் தங்கள் வருகை தேதியை மாற்றுவதற்கான வசதியை தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது.