பெங்களூரு: பைசர் மற்றும் மாடர்னா நிறுவன தடுப்பூசிகளை வாங்க கர்நாடக அரசு ஆலோசனை நடத்துகிறது. கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவல் அதிக அளவில் காணப்படுகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பைசர் மற்றும் மாடர்னா நிறுவன தடுப்பூசிகளை வாங்க கர்நாடக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தடுப்பூசி பற்றாக்குறை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், சர்வதேச டெண்டர் மூலம் தடுப்பூசி வாங்க கர்நாடகா முடிவு செய்துள்ளது.