மதுரை: திருச்சி பெல் நிறுவனத்தில் 140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி துவங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசு பதிலளிப்பதன் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என மதுரை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. பெல் நிறுவனத்தில் உள்ள 3 ஆக்சிஜன் உற்பத்தி பிரிவு மூலம் 140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.