தமிழகம் ஸ்ரீரங்கம் கோயில் ஐயர் நியமனம் தொடர்பான அறிவிப்பு: ரத்து செய்து கோயில் இணை ஆணையர் உத்தரவு May 12, 2021 ஸ்ரீரங்கம் கோயில் திருச்சி: ஸ்ரீரங்கம் கோயில் ஐயர் நியமனம் தொடர்பான அறிவிப்பு, நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக கோயில் இணை ஆணையர் மாரிமுத்து அறிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் 51-வது ஐயர் நியமனம் தொடர்பாக கோயில் வலைதளத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் கோயில் நிர்வாகம் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் 51-வது ஐயர் பட்டத்திற்காக காலியாக உள்ள பதவிக்கு, தகுதி உடையவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை வழக்கமாக கோயில் நிர்வாகம் மூலமாக தான் ஐயர் நியமனம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கோயில் வலைதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக அந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயில் ஐயர் நியமன விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் நியமனம் தொடர்பான அறிவிப்பை கோயில் இணை ஆணையர் ரத்து செய்துள்ளார்.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்