சென்னை தொற்றுப் பரவலைக் குறைக்கப் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை: சுகாதாரச் செயலாளர் பேட்டி May 12, 2021 சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் கடந்த சில நாட்களாக தொற்றுப் பரவலின் ஏற்றத்தில் சிறு கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். சென்னை பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்தியாவில் கொரோனா பரவல் பன்மடங்கு உயர்ந்துள்ளது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் படிப்படியாக தொற்றுப் பரவல் அதிகரித்து வந்தது. எனினும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் கடந்த சில நாட்களாகத் தொற்றுப் பரவலின் ஏற்றத்தில் சிறு கட்டுப்பாடு காணப்படுகிறது என பேட்டியளித்தார். இந்த அரிய வாய்ப்பைப் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மக்கள் முழுமையாகப் பயன்படுத்தி, பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கூறினார். தொற்றுப் பரவலைக் குறைக்கப் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. மக்கள் லேசான அறிகுறி ஏற்பட்டாலும், பரிசோதனை செய்ய வேண்டும் என கூறினார்.
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க 3 மாதங்களில் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்: பொது மேலாளர் உத்தரவு
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் தேர்தல் ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் 4 அடுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்
ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு 1 மணிநேரம் தாமதம்: எம்பி, எம்எல்ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்