மதுரை: இந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. ஆக்சிஜன் தயாரிக்கும் கம்பெனிகள், மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களை அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.