சென்னை: கொரோனா சிகிச்சை பணியில் தங்களையும் பயன்படுத்த வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் இருந்து ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று பல ஆயிரம் பேர் மருத்துவம் படிக்கின்றனர். கொரோனா தொற்று பெருகி வரும் சூழலில் தங்களை அரசு பயன்படுத்திக் கொள்ள வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.