ராமநாதபுரம் அருகே கரை ஒதுங்கிய கடல் பசு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே ஒரு டன் எடையுள்ள கடல் பசு இறந்து கரை ஒதுங்கியது. ராமநாதபுரம் அருகே புதுமடம் தென் கடல் பகுதியில் 3 மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம், ஒரு டன் எடையுள்ள பெண் கடல் பசு இறந்து நேற்று காலை கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த மண்டபம் வனச்சரக அலுவலர் வெங்கடேஷ், வனவர் மகேந்திரன், வனக்காப்பாளர் பிரபு தலைமையில் வேட்டைத் தடுப்பு காவலர்கள், வன ஊழியர்கள் அங்கு சென்றனர். மண்டபம் கால்நடை மருத்துவர் உடற்கூறு ஆய்வில் இயற்கை மரணம் என தெரிந்தது. இதையடுத்து, ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி கடற்பசு புதைக்கப்பட்டது.

Related Stories: