இந்தியா அமெரிக்காவில் இருந்து 78,595 ரெம்டெசிவிர் மருந்துகள் விமானம் மூலம் மும்பை விமான நிலையம் வருகை May 12, 2021 மும்பை விமான நிலையம் ஐக்கிய மாநிலங்கள் மும்பை: அமெரிக்காவில் இருந்து 78,595 ரெம்டெசிவிர் மருந்துகள் இன்று விமானம் மூலம் மும்பை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. இதற்கு முன்னதாக அமெரிக்காவில் இருந்து கடந்த 5 ஆம் தேதி 81,000 ரெம்டெசிவிர் மருந்துகளும், மே 8 ஆம் தேதி 25,600 ரெம்டெசிவிர் மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை இல்லாத இனிப்புகள்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு அவரது தரப்பு மறுப்பு
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு