உலகம் பிரேசிலில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை கர்ப்பிணி பெண்களுக்கு பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது சகாதாரத்துறை May 12, 2021 பிரேசில் பிரேசில்: பிரேசிலில் கர்ப்பிணி பெண்களுக்கு அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போட்டுக் கொள்ள அந்நாட்டு அரசு இடைக்கால தடை விதித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த நாட்டில் அஸ்ட்ரா ஜெனகா, சினோவாக் மற்றும் பைசர் ஆகிய 3 நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு வலிப்பு நோய் ஏற்பட்டு கடந்த 10 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவே காரணம் என கூறப்படுகிறது. உயிரிழந்த பெண் 23 வார கர்ப்பிணியாக இருந்துள்ளார். பிரேசிலில் வேறு எந்த கர்ப்பிணி பெண்களுக்கும் இது போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை. பிரேசில் நாட்டில் கர்ப்பிணி பெண்கள் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள இடைக்கால தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அங்கு பயன்பாட்டில் இருக்கும் மற்ற தடுப்பூசிகளை கர்ப்பிணி பெண்கள் செலுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் மிக மோசமான பாதிப்புகளை பிரேசில் நாடு சந்தித்து வருகிறது.
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி
பிரான்சில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர்; பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி தடை செய்யப்படும்: ரஷ்யா எச்சரிக்கை
மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 10 பேர் உயிரிழப்பு..!!
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்