29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு: நேற்று ஒரே நாளில் 19,182 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 29 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 19,182 பேர் குணமடைந்தனர். தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,56,111 பேருக்கு கொரோனா பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது. இதில், 29 ஆயிரத்து 272 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்படி, கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,62,181 ஆக உள்ளது. 19,182 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை  12,60,150 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 298 பேர் நேற்று உயிரிழந்தனர். இதேபோல், சென்னையில் நேற்று 7,466 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னைக்கு அடுத்தபடியாக  செங்கல்பட்டில் 2,419, கோவையில் 2,650, மதுரை 1,024, திருவள்ளூரில் 1,204 பேருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதிகபட்சமாக நேற்று சென்னையில் 92 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: