சென்னை: தமிழக சட்டப் பேரவையில் 69 ஆண்டுகளாக ஆங்கிலோ இந்தியன் வகுப்பினருக்கு அளிக்கப்பட்ட பிரதிநிதித்துவம் முடிவுக்கு வந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 1952-ம் ஆண்டு முதல் இதுவரை 10 ஆங்கிலோ இந்தியன் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர். இவர்களில் 3 பேர் ஆண்கள் மற்றும் 7 பெண்கள் ஆவார்கள். தமிழக சட்டப்பேரவையில் பல ஆண்டுகளாக ஆங்கிலோ இந்தியன் வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழக சட்டசபையிலும், நாடாளுமன்றத்திலும் ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதித்துவம் தொடர்பாக சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கடந்த சட்டப் பேரவையுடன் ஆங்கிலோ இந்தியன் வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் 69 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தின்படி ஆங்கிலோ இந்தியன் நியமன உறுப்பினர் இல்லாமல் கூடியுள்ள முதல் சட்டப் பேரவையாகும்.