தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள கூடுதல் நிதி தேவை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள்:: பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள கூடுதல் நிதி தேவை உள்ளதால், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்க வேண்டுமென்று பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்  விடுத்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வேண்டுகோள்: கோவிட் தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக  பாதிக்கப்பட்டுள்ளது.  தற்போது 1,52,389 பேர் நோய் தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 31,410 பேர் ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த அலை நமது மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பின் மீதும்  மக்கள் மீதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  வரலாறு காணாத இந்தச் சவாலை சமாளிக்கவும், மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவும், நமது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு சிரமப்பட்டு வரும் நிலையில் இந்த பேரிடரை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு கூடுதலான நிதி ஆதாரங்களை செலவிட வேண்டிய தேவையும் உள்ளது.  எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். நாம் அனைவரும் ஒன்றுகூடி இப்போரை வெல்வதற்கான நேரம் இது.   

இந்த சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கிறேன்.  இந்த பேரிடர் காலத்தில் தாங்கள் ஒவ்வொருவரும்  அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள்,  உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவ கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாக பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரி சட்டத்தில் 100 சதவீதம் வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு சட்டத்தின் கீழ்  விலக்களிக்கப்படும்.

* இசிஎஸ் மூலமாக நிதி அனுப்புவோர் உரிய அலுவலக பற்றுச்சீட்டினை பெற ஏதுவாக பெயர், செலுத்தும் தொகை, வங்கி மற்றும் கிளை, செலுத்தப்பட்ட தேதி, நிதி அனுப்பியதற்கான எண், தங்களது முழுமையான முகவரி, இ-மெயில்  விவரம், தொலைபேசி எண் குறிப்பிட வேண்டும்.

* நிவாரண நிதி வழங்கும் வெளிநாடுவாழ் மக்கள் கீழ்க்கண்ட SWIFT Code--ஐப் பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IOBAINBB001 Indian Overseas Bank, Central Office, Chennai.

* மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள் குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்: அரசு இணை செயலாளர் மற்றும் பொருளாளர், முதலமைச்சர் பொது  நிவாரண நிதி, நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமை செயலகம், சென்னை - 600 009, தமிழ்நாடு, இந்தியா. மின்னஞ்சல் முகவரி jscmprf@tn.gov.in தற்போதைய நோய் தொற்று நிலையில், நேரிடையாக முதல்வரிடமோ, அரசு  அலுவலர்களிடமோ நன்கொடை வழங்குவதை தவிர்க்க வேண்டும். எனினும், ₹10 லட்சத்துக்கு மேல் நிதியுதவி செய்யும் நபர்கள், நிறுவனங்களின் பெயர்கள் பத்திரிகை செய்தியாக வெளியிடப்படும். பெறப்படும் அனைத்து நன்கொடைகளுக்கும்  உரிய ரசீதுகள் அனுப்பி வைக்கப்படும். இந்த நன்கொடைகளும் மாநில அரசால் மேற்கொள்ளப்படும் கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்கொடை வழங்குவது எப்படி? நன்கொடைகளை மின்னணு  முறை மூலம் பின்வருமாறு வழங்கலாம்.

* வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை / பற்று அட்டையின் மூலமாக கீழ்க்கண்ட இணையதளம் வழியாக செலுத்தி ரசீதினை பெற்றுக்கொள்ளலாம்.

https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html

* Electronic Clearing System (ECS) / RTGS / NEFT மூலமாக கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம்.

நிறுவனங்கள் சமூக பொறுப்பின் கீழ் வழங்கலாம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு  அளிக்கப்படும் நன்கொடைகள் தவிர, நிறுவனங்களின் சமூக பொறுப்பின் கீழ் கொரோனா  நிவாரணத்திற்காக நிதியுதவி வழங்கும் நிறுவனங்கள்,  மாநில பேரிடர் மேலாண்மை  அமைப்பின் கீழ்காணும் வங்கி கணக்கில் செலுத்தலாம்.

வங்கி பெயர்        இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

கிளை            தலைமை செயலகம், சென்னை - 600 009

சேமிப்புக் கணக்கு எண்    117201000000070

IFS Code            IOBA0001172

MICR Code        600020061

CMPRF PAN        AAAGC0038F

UPI VPA ID: tncmprf@iob மற்றும்

PhonePe, Google Pay,

PayTM, Amazon Pay, Mobikwik  போன்ற பல்வேறு செயலிகள்.

வங்கி பெயர்    இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

கிளை        தலைமை செயலகம், சென்னை - 600 009

சேமிப்பு கணக்கு எண்    117201000017908

IFSC Code        IOBA0001172

Related Stories: