காவல்துறை நிர்வாக பிரிவுக்கு கூடுதல் டிஜிபி ரவி பொறுப்பு ஏற்பு

சென்னை: தமிழக காவல்துறை நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபி ரவி நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.  தமிழக காவல்துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை நேற்று முன்தினம் உள்துறை செயலாளர் பிரபாகர் பணியிடமாற்றம் செய்து  உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி ஈரோடு சிறப்பு காவல் படை கூடுதல் டிஜிபியாக இருந்த ரவி காவல்துறை நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதைதொடர்ந்து கூடுதல் டிஜிபி ரவி மெரினா காமராஜர்  சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் காவல்துறை நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபியாக நேற்று மதியம் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு நிர்வாக பிரிவு உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: