கொரோனா விதிகளை மீறிய 10 கடைகளுக்கு அபராதம்

அண்ணாநகர்: அமைந்தகரை 8வது மண்டல வருவாய் துறை அதிகாரி ஜோசப் மற்றும் கடை உரிமம் ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமையில் ஊழியர்கள் நேற்று முன்தினம் அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு பகுதிகளில்  உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய 10 கடைகளுக்கு ₹20 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், தொடர்ந்து இதுபோல்  செயல்பட்டால்  கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர். இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக, அரசால் நியமிக்கப்பட்ட கோபால சுந்தர்ராஜ் ஐஏஎஸ் வில்லிவாக்கம், அண்ணா நகர், அரும்பாக்கம்,  அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories: