சென்னை: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த பொதுநல கூட்டமைப்பு தலைவர் பன்னீர் செல்வம் கூறியதாவது: தமிழகத்தில் 55 ஆயிரம் மணல் லாரிகள் இயங்கி வந்தன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மணல் வழங்கும் முறையில் பல்ேறு குளறுபடிகளை செய்ததால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கின்ற நிலைமைக்கு அதிமுக ஆட்சியாளர்கள் கொண்டு சென்று விட்டனர். இந்த 55 ஆயிரம் லாரிகளுக்கும் அதன் உரிமையாளர்கள் அதனை சார்ந்த தொழிலாளர்கள் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பிழைப்பிற்கு வழியின்றி மிக கேவலான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். 40 ஆயிரம் லாரிகள் விற்கப்பட்டது. தற்போது வெறும் 15 ஆயிரம் மணல் லாரிகள் தான் இயங்கி வருகின்றன. மற்ற லாரிகளை பைனான்சியரும், காயலான் கடைக்காரரும் எடுத்துக் கொள்ளும் அவல நிலை ஏற்பட்டன.