மதுரை :மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கொரோனா நோய் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. டெல்லி, மும்பை, பெங்களூரூ உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதனால் 60 சதவீத மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொடர் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் பெரும்பாலானோரின் வாழ்வாதாரத்தை முடக்கியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானோர் பாதித்துள்ளனர். ஆக்சிஜன், மருந்துகள் உள்ளிட்டவைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் அலை உருமாறி தாக்கி வருகிறது. கடுமையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டால் தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். பல மாநிலங்கள் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.