அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் ஸ்ரீஸ்வாமிநாராயண் குருகுல் விஷ்வவித்யா பிரதிஷ்தனம் என்ற பெயரில் கோசாலை இயங்கி வருகின்றது. இங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக, மாட்டு சாண தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு தருவதாகவும் நம்பப்படுகின்றது. கடந்த ஒரு மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறும் சுமார் 15 பேர் இங்கு வந்து மாட்டுச்சாண தெரபி சிகிக்சை எடுத்துள்ளனர். இதில் உடல் முழுவதும் மாட்டு சாணம், கோமியம் தேய்ப்பது அதன் பின்னர் பால் மூலமாக அவை கழுவப்படுகின்றது. சில டாக்டர்கள் கூட இந்த தெரபியை எடுத்துக் கொள்ள வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் மாட்டு சாண தெரபி கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பு வழங்காது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.