திருவனந்தபுரம்: கேரளாவில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருவதால் தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக முதல்வர் பினராய் விஜயன் கூறினார்.
கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறியதாவது: கேரளாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கேரளாவில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளது. இது வரும் 15ம் தேதிக்குள் 6 லட்சமாக உயர வாய்ப்பு உண்டு. இந்த சூழ்நிலையில் கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழ்நாடு உள்பட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.