ரஷ்யாவில் பயங்கரம்: பள்ளியில் துப்பாக்கி சூடு 7 மாணவர், ஆசிரியர் பலி

மாஸ்கோ:  ரஷ்யாவில் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 7 மாணவர்கள், ஆசிரியர் ஒருவர் பலியானார்கள். ரஷ்யாவின் கசான் நகரில் உள்ள பள்ளியில் நேற்று  இரண்டு பேர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். அங்கிருந்த மாணவ, மாணவிகளை  நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆசிரியர் ஒருவரும் பலியானார். மேலும் 21 பேர் காயமடைந்ததாக அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் தெரிவித்து இருந்தது. டடர்டான் குடியரசு கவர்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கசானில் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் , 8வது கிரேட் படிக்கும் 4 மாணவர்கள், 3 மாணவிகள் உயிரிழந்துள்ளனர். ஆசிரியர் ஒருவரும் பலியாகி உள்ளார்.

மேலும் 18 மாணவர்கள், 3 ஊழியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட 19வயது நபர் பிடிபட்டுள்ளார். அவரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

Related Stories: