சொல்லிட்டாங்க...

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் மக்களை தவறாக வழி நடத்துகிறது. பொய்யான பீதியை உருவாக்குகிறது. - பாஜ தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

பேராயுதமாக பயன்படுத்த வேண்டிய தடுப்பூசி மருந்தை வணிகமாக்கி, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உயிர்களோடு மத்திய அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

நடைமுறைக்கு ஒத்துவராத விதிகளை அடிப்படையாக வைத்து, தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைப்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி. - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

புதுச்சேரியில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சதி நடவடிக்கையில் பாஜ இறங்கியிருக்கிறது. - விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories: