ஆந்திராவில் அட்டூழியம் செய்யும் கொரோனா: ஒரே நாளில் 20,345 பேருக்கு கொரோனா உறுதி

ஆந்திரா: ஆந்திராவில் கொரோனா  இரண்டாது அலை மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 86 ஆயிரத்து 878 பேருக்கு கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 20 ஆயிரத்து 345  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 108 பேர் உயிரிழந்தனர். இன்று ஒரு நாளில் மட்டும் 14,502 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  

ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கை 13,22,934 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 11,18,933-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8899-ஆக உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் மருத்துவமனைகளில் இதுவரை 1,95,102 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தீயா பரவி வருகிறது. ஆகவே இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதேபோல் ஆந்திராவிலும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.

Related Stories: