இந்தியா ஆந்திராவில் அட்டூழியம் செய்யும் கொரோனா: ஒரே நாளில் 20,345 பேருக்கு கொரோனா உறுதி May 11, 2021 கொரோனா ஆந்திரப் பிரதேசம் ஆந்திரா: ஆந்திராவில் கொரோனா இரண்டாது அலை மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 86 ஆயிரத்து 878 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 20 ஆயிரத்து 345 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 108 பேர் உயிரிழந்தனர். இன்று ஒரு நாளில் மட்டும் 14,502 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கை 13,22,934 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 11,18,933-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8899-ஆக உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் மருத்துவமனைகளில் இதுவரை 1,95,102 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தீயா பரவி வருகிறது. ஆகவே இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதேபோல் ஆந்திராவிலும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு
ராகுல் தொகுதியில் புகுந்த மாவோயிஸ்டுகள் மக்கள் யுத்த கெரில்லா படையைச் சேர்ந்தவர்கள்: போலீசார் தீவிர கண்காணிப்பு
மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்.. 170 செல்போன்களை பயன்படுத்தியுள்ளார் : அமலாக்கத்துறை விளக்கம்
பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!!
சமூக நீதி கருத்தரங்கில் இந்தியா கூட்டணிகள் கட்சிகள் பங்கேற்பு..சமூக நீதிக்கான குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது: வில்சன்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலிக்கு ஆபத்து ஏற்படும்: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் பீகாரில் பரபரப்பு