ஆயுதப்படை காவலர் தற்கொலை

சென்னை: திருவல்லிக்கேணி நல்லதம்பி தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கமலக்கண்ணன்(30). இவர் கடந்த 2010ம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக  பணியில் சேர்ந்தார். தற்போது மாநகர ஆயுதப்படையில் ‘சி’ கம்பெனி 14ம் அணியில் ஆயுதப்படை காவலராக வேலை செய்து வந்த இவர், அயல் பணியாக சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர்  அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.மன உளைச்சல் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த மார்ச் முதல் வாரத்தில் இருந்து கமலக்கண்ணன் நீண்ட நாள்  மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Related Stories: