திருவனந்தபுரம் : கேரளாவில் அனைத்து சிறைகளிலும் கொரோனா பரவி வருகிறது. இதையடுத்து 60 வயதுக்கு மேலான ஆண்கள், 50 வயதுக்கு மேலான பெண்கள், குற்ற பின்னணி இல்லாதவர்கள், ஒரு வழக்கில் மட்டும் தொடர்புடையவர்கள், 7 வருடத்திற்கு குறைவாக தண்டனை பெற்றவர்கள், விசாரணை கைதிகள் ஆகியோருக்கு 3 மாதம் பரோல் வழங்க தீர்மானிக்கப்பட்டது.