கேரளாவில் மேலும் 1000 கைதிகளுக்கு பரோல்

திருவனந்தபுரம் : கேரளாவில் அனைத்து சிறைகளிலும் கொரோனா பரவி வருகிறது. இதையடுத்து 60 வயதுக்கு மேலான ஆண்கள், 50 வயதுக்கு மேலான பெண்கள், குற்ற பின்னணி இல்லாதவர்கள், ஒரு வழக்கில் மட்டும் தொடர்புடையவர்கள், 7 வருடத்திற்கு குறைவாக தண்டனை  பெற்றவர்கள், விசாரணை கைதிகள் ஆகியோருக்கு 3 மாதம் பரோல் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி கடந்த சில தினங்களாக 568 பேருக்கு பரோல் வழங்கப்பட்டது. தற்போது மேலும் 1000 கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட உள்ளது. தேசவிரோத வழக்கு உள்பட கடுமையான பிரிவுகளின் கீழ் உள்ளவர்களுக்கு பரோல் வழங்கப்பட வில்லை.

Related Stories: