தஞ்சை: கொரோனா பரிசோதனைக்கு அச்சப்பட்டு, ஓடி ஒளிந்தவர்கள் மத்தியில் ஆர்வத்துடன் தானாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்ட 115 வயது மிட்டாய் தாத்தாவை நகராட்சி பணியாளர்கள் பாராட்டினர். தஞ்சாவூர் கீழவாசல் ஆடக்காரத் தெருவில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.