தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிபிசிஐடி தலைவராக ஷகீல் அக்தர், லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக கந்தசாமி, கூடுதல் காவல் தலைவராக எம்.ரவி, சென்னையின் உளவுத்துறை (உள்நாட்டு பாதுகாப்பு) ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை நியமனம் செய்துள்ளனர்.

மேலும், உளவுத் துறையின் டிஐஜியாக ஆசியம்மாள், சிறப்புப் பிரிவு சிஐடி எஸ்.பி.யாக அரவிந்தன், பாதுகாப்புப் பிரிவு சிஐடி-1 எஸ்.பி.யாக திருநாவுக்கரசு, பாதுகாப்புப் பிரிவு சிஐடி-2 எஸ்.பி.யாக சாமிநாதன், உளவுத்துறை குற்றப்பிரிவின் எஸ்.பி.யாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் பேடி சிங் பேடி நியமிக்கப்பட்டார். அதேபோல் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: