தமிழகம் 'சாத்தியம் உள்ள ஆலைகளில் எல்லாம் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும்'!: அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி..!! May 10, 2021 அமைச்சர் காஞ்சிபுரம்: திருச்சி பெல் தொழில்சாலை உள்ளிட்ட இதர தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வாய்ப்பு இருந்தால் அங்கெல்லாம் விரைவில் உற்பத்திக்கான பணிகள் தொடங்கப்படும் என்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலை, வட மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த ஆலையில் நாளொன்றுக்கு 160 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போதைய தேவையை கருதி, 180 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்றார். திருச்சியில் உள்ள பெல் மற்றும் இதர தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வாய்ப்பு இருந்தால் உடனடியாக அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி அளித்தார். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அண்டை மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொண்டு சொல்லப்பட்டாலும் தமிழ்நாட்டுக்கான இருப்பு குறைந்துவிடாமல் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார். இந்த ஆய்வின் போது ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிடுவது குழந்தைகள் உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் மனு தாக்கல்: ஜூன் மாதத்திற்கு விசாரணை தள்ளிவைப்பு
சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று நேரில் ஆஜராக சம்மன்: அமலாக்கத்துறை நடவடிக்கை
சூரிய சக்தி மின்சார நுகர்வில் புதிய உச்சம் ஒரே நாளில் 40.50 மில்லியன் யூனிட் நுகர்வு: மின்வாரியம் தகவல்
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமையும் பகுதியை தொல்லியல் குழு ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் விதிமுறைகளை பின்பற்றி மே தின கொண்டாட்டங்களுக்கு கலெக்டர்கள் அனுமதி வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற கொலை முன்விரோதத்தால் ஏற்பட்டுள்ளது: காவல்துறை விளக்கம்