கொல்கத்தா: ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் வரும் ஜூன் 18ம்தேதி முதல் 22ம் தேதி வரை இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடக்கிறது. இதற்காக கோஹ்லி தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணி வரும் 2ம் தேதி லண்டன் புறப்படுகிறது. இந்த போட்டி முடிந்ததும் இங்கிலாந்துடன் ஆகஸ்ட் மாதத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்த தொடர் செப்டம்பர் 14ம் தேதி வரை நடக்க உள்ளது. இதனிடையே இந்திய அணி ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி.20 போட்டிகளில் விளையாட உள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.