சேரம்பாடி சப்பந்தோட்டில் மர பாலத்தால் விபத்து அபாயம்

பந்தலூர் : பந்தலூர் அருகே சேரம்பாடி சப்பந்தோடு பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் அங்குள்ள நீரோடையை கடந்து செல்வதற்கு பாலம் இல்லாததால் நீரோடையின் குறுக்கே மரத்துண்டுகளை வைத்து ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனர்.

மழைக்காலங்களில் வெள்ளப்பெறுக்கு ஏற்பட்டு மரத்துண்டுகள் அடித்து செல்வதால் மேலும் கடும் பாதிப்படைகின்றனர். பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க கோரி சேரங்கோடு ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகமும் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி நீரோடையின் குறுக்கே பாலம் கட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: