தேன்கனிக்கோட்டை :தேன்கனிக்கோட்டை நெடுஞ்சாலைதுறை அலுவலக வளாகத்தில் தேங்கும் கழிவுநீரால், அலுவலர்கள் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தேன்கனிக்கோட்டையில் உள்ள நெடுஞ்சாலைதுறை அலுவலகத்தின் பின்புறம் உள்ள 5வது வார்டு ஆசாத்தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், போதிய கால்வாய் வசதி இல்லாததால், நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர் அலுவலகத்தை சுற்றி குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. துர்நாற்றம் வீசுவதால் அலுவலகத்தில் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.