சென்னை: சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கக் கோரி ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சென்று கோரிக்கை அளித்துள்ளார். சின்னத்திரை படப்பிடிப்பு நடந்தால் சுமார் 2000 தொழிலாளர்கள் பயன்பெறுவர் என ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மேலும் உரிய முடிவை விரைவில் தெரிவிப்பதாக முதல்வர் உறுதியளித்ததாக கூறினார். சின்னத்திரை, வெள்ளித்திரை போன்ற படப்படிப்புகளுக்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.