சென்னை: கொரோனா தொற்று 2ம் அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சன் டி.வி. குழுமம் சார்பில் ரூ.30 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு திட்டங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள் போன்றவற்றையும் சன் டி.வி. குழுமம் வழங்க உள்ளது.