திருப்பூர் : திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
திருப்பூர் தென்னம்பாளையத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு வெள்ளியங்காடு, பட்டுக்கோட்டையார் நகர், காட்டுவளவு, பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் தினசரி வந்து மீன்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன் வாங்க அதிக அளவில் பொதுமக்கள் வந்தனர். இதனால், மீன் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.