தமிழகம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியது..!! May 10, 2021 சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையை பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி தமிழ்நாடு முழுவதுமாக இன்று தொடங்கியுள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் பரப்புரையின் போது மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஜூன் 3ம் தேதி இந்த தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான கோப்பில் கடந்த 7ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதனை தொடர்ந்து நியாயவிலை கடை ஊழியர்கள் இன்று முதல் டோக்கன்கள் வழங்கும் பணியை துவங்கியிருக்கிறார்கள். மதுரை மாவட்டம் திருநகரில் அவர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன்களை வழங்கினர். டோக்கன் பெற்றோருக்கு 2000 ரூபாய் ரொக்கம் இம்மாதம் 15ம் தேதி வழங்கப்படவுள்ளது. கோவையிலும் நியாயவிலை கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று கொரோனா நிவாரண தொகைக்கான டோக்கன்களை வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், டோக்கன் விநியோகம் நடைபெற்று வருகிறது. பொருட்கள் வாங்க நியாயவிலை கடைகளுக்கு வருவோர்க்கும் அங்கேயே டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டோக்கன் பெற்றவர்கள் எதிர் வரும் 15ம் தேதி அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிக்குள் 2,000 ரூபாயை ரொக்கமாக பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தவறு செய்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் தனிப்பட்ட வெறுப்புகளுடன் நீதிமன்றத்தை அணுக கூடாது
மீன்பிடி தடைக்காலத்தில் முதல்வர் உயர்த்திய நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் கிடைத்ததில் மகிழ்ச்சி: மீனவர்கள் நெகிழ்ச்சி
வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப அலை வீசும் என்பதால் தயார் நிலையில் மருத்துவர்கள்: பொதுசுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்
வாக்குப்பதிவின்போது சீரான மின்விநியோகம் தயார் நிலையில் இருக்க ஊழியர்களுக்கு அறிவுரை: அதிகாரிகள் தகவல்
உள்நோக்கத்துடன் பொய் குற்றச்சாட்டு கூறியதால் இபிஎஸ் மீது தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு வழக்கு: எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல்
பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன் கட்டாயம் சரிபார்க்க கோரிய மனுவை விசாரிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு
அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க முன் அனுமதி தேவையில்லை: கலெக்டரின் உத்தரவு ரத்து, ஐகோர்ட் கிளை அதிரடி
சொந்த ஊர் செல்லும் வாக்காளர்கள் வசதிக்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லாத சிறப்பு மின்சார ரயில் இயக்கம்!
தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது: அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி
மக்களவை தேர்தலை ஒட்டி நாளை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு