புதுடெல்லி: அசாம் மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜவை சேர்ந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவியேற்றுக் கொண்டார். அசாம் மாநிலத்தில் நடந்த சட்டமன் ற தேர்தலில் பாஜ கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. 60 தொகுதிகளில் பாஜவும், 15 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றன. பாஜ வெற்றி பெற்றபோதிலும், முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது. கடந்த முறை முதல்வராக இருந்த சர்பானந்த சோனாவால் மற்றும் பாஜ கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கு பெரும் பங்காற்றிய ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோரில் யார் முதல்வராவது என்பதில் போட்டி நிலவியது. இதனை தொடர்ந்து இருவருக்கும் கட்சி மேலிடத்தில் இருந்து கடந்த வெள்ளியன்று அழைப்பு வந்தது. இருவரிடமும் தனித்தனியாகவும், ஒன்றாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.