சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக கல் பிரச்சனைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. எனவே அவர் தீவிர சிகிச்சைப்பரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்சூர் அலிகான் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை உட்பட அனைத்து பரிசோதனைகளும் நடைபெற்று, அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருகிறார். தமிழ் திரையுலகில் முன்னணி வில்லனாக வலம் வந்தவர் மன்சூர் அலிகான்.