சென்னை: சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் என்னுடன் தொடர்புடன் இருந்தவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது.